Posts by maatram.org
அத்தகைய எந்த முயற்சியிலும் அரசாங்கம் இறங்கக் கூடிய சாத்தியம் இல்லை. என்றாலும், அவ்வாறான முயற்சி எதுவும் முன்னெடுக்கப்படுமானால் இலங்கைக்கு பல 'அறகலய'க்கள் தேவைப்படலாம்.
LINK👇
நீதி புதைக்கப்பட்டது போதும்... உண்மை வெளிவரட்டும்!
#JusticeForEasterSunday #EasterSundayAttacks #EasterSundayAttack
உடனடியாக இதை நீக்க வேண்டுமென்றால் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின் நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டும். maatram.org/articles/12686
#lka #SriLanka #Malaiyaham
இந்த ஆண்டு சுற்றாடல் அமைச்சரின் தலைமையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஈரநில தினத்தைக் கொண்டாடி மக்களுக்கு வழிகாட்டிய ஒரு அரசாங்கம் என்ற ரீதியிலும், ஈரநிலங்களை அழிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை. maatram.org/articles/12664
#lka #SriLanka #Jaffna
ஒரு கட்சி முறைமை என்பது தனியொரு கோட்பாட்டின் ஊடாக அதிகாரத்தைக் குவிப்பதையும் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதையும் நியாயப்படுத்துவதற்காகவே புரட்சிகளுக்குப் பிறகு பெரும்பாலும் நிறுவப்பட்டு வந்திருக்கிறது. maatram.org/articles/12659
by V. Thanabalasingham
#lka #SriLanka #China
குருக்கள்மடம் மனித புதைக்குழி: 3 நாட்களாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் மனித எச்சங்கள், சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்படாத நிலையில் அகழும் பணியை நிறுத்துவதாகவும் ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் OMP தெரிவித்துள்ளது.
#KurukkalmadamMassacre
ஒரு போர் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைக்கிறது. அது பேரழிவின் தடயங்களை விட்டுச் செல்கிறது, அதன் பின்விளைவுகள் தப்பிப் பிழைத்தவர்களை நீண்டகாலத்திற்கு அச்சுறுத்துகின்றன. போர் என்பது ஒன்றும் காணொளி விளையாட்டு (Video game) அல்ல. maatram.org/articles/12655
#lka #SriLanka #War
மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா ராமநாதன் கருத்துக்கள் வௌியிட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி மலையக சிவில் அமைப்புகளைச் சேர்ந்தோர் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
#Malaiyaham #MalaiyahaTamil #Archchuna #HateSpeech #SriLanka
15 அம்சக் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சிவில் சமூகம், அரசியல் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் கோரிக்கை ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.
#lka #SriLanka #MalaiyahaTamil
மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு (Civil Society Collective for Malaiyaha Reconstruction), டித்வா பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் அவல நிலையைத் தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் 15 அம்சக் கோரிக்கைகள் maatram.org/.../2026/03/...
#lka #SriLanka #MalaiyahaTamil
இதுவரை இப்புரிந்துணர்வு உடன்படிக்கை அரச வர்தமானியில் பிரசுரிக்கப்பட வில்லை. மேலும் இவ்வொப்பந்தத்தின் படி எத்தனை வருடங்களுக்கு அரசாங்கம் 200 ரூபா வழங்கும் என்பது தெரியவில்லை. கிடைக்கப் பெறும் தகவல்களின் படி மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகுமெனில் மூன்று வருடம் வரை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வைக் கோர முடியாது. maatram.org/articles/12646
#lka #SriLanka #MalaiyahaTamil
“நாமும் நாட்டுக்காக அந்நிய செலாவணியை ஈட்டுகிறோம் இல்லையா? ஆண் விவசாயிகளைப் போலவே எம்மையும் ஏன் மரியாதையாக நடத்த முடியாது?” maatram.org/articles/12627
by @aarudpra.bsky.social
#climatecrisis #ClimateCrisisSriLanka #climatechanges #tamilhomeland #Tamil #lka #SriLanka
இன்றைய ‘நாஜி’களான ட்ரம்பும் நெதான்யாகுவும் செய்யும் சர்வதேச காடைத்தனத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் உலக நாடுகள் பரிதாபகரமாக கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. maatram.org/articles/12620
#SriLanka #IranIsraelUS
இலங்கையின் கல்வி முறையில் AI தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்குத் தேவையான ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நேரடியாக ஒப்பந்தங்களைச் செய்திருக்கலாம். இவ்வாறான ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைப்பதன் மூலம், இலங்கை வெறும் ஒரு தொழில்நுட்ப நுகர்வோர் நாடாக மாத்திரம் இல்லாமல், சர்வதேச AI நிர்வாகத்தில் தனது ஆளுமையை வெளிப்படுத்தும் ஒரு நாடாகத் திகழ்ந்திருக்க முடியும். maatram.org/articles/12617
தோழர்கள் மறைந்திருந்த இடங்களைக் காட்டித் தருமாறு கேட்டு சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரி நல்லகண்ணுவின் அடர்த்தியான மீசையைச் சிகரெட்டினால் சுட்டுப் பொசுக்கியதனால் அன்று தொடக்கம் மீசைவைக்கும் வழக்கத்தை அவர் கைவிட்டுவிட்டார். maatram.org/articles/12605
#Nallakannu #nallakannuayya
டிஜிட்டல் யுகத்தில் சிரிப்பு என்பது ஒரு அரசியல் தெரிவு; அந்தத் தெரிவு நம்மைச் சிந்திக்க வைக்கிறதா அல்லது சிந்திக்க விடாமல் தடுக்கிறதா என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். maatram.org/articles/12600
#lka #SriLanka #Memes #PliticalMemes
டித்வா பேரிடரால் சேதமடைந்த தோட்டப்புற வீதிகளை (உட்கட்டமைப்பு) கம்பனிகள் புனரமைக்கும் வரை – தொழிலாளர்கள் உயிரிழக்கும் வரை - அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்குமா?
இடம்: நுவரெலியா, கொங்கோடியா தோட்டம்
📹 Parthiban Shanmuganathan
#Malaiyaham #MalaiyahaTamil #Ditwa
இதுவரையான மூன்று சட்ட வரைவுகளுமே எந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டனவோ அதே சட்டத்தில் உள்ளதை விடவும் கொடூரமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை நோக்கும்போது அதுவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே அரசாங்கங்கள் செயற்படுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. maatram.org/articles/12596
#PSTB #PSTA #NOPSTA #RepealPTA #lka #SriLanka
முன்மொழியப்பட்ட "#PSTA" சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளுடன் எவ்வாறு முரண்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இலங்கை அரசிற்கு ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் அறிக்கை
maatram.org/wp-content/u...
#NOPSTA
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (12) வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் இடம்பெற்றது.
கொலைக்கு காரணமான பொலிஸாரை கைது செய்து நீதியை நிலைநாட்டுமாறு கோரி பதாகைகளை தாங்கியவாறு உடலத்துடன் வந்த உறவுகள் "பொலிஸாரை கைதுசெய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📸 Virakesari
குமாரபுரம் படுகொலை: 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி நினைவேந்தல் நிகழ்வு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் நேற்று குமாரபுரம் கிராமத்தில் இடம்பெற்றது.
📸 Sanjeevan Thurainayagam
#KumarapuramMassacre
“என்னைச் சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்” என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால் தாம் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சற்று முன்னதாக அவரது தலைக்கு மேலாக இரு கைகளையும் கூப்பி கெஞ்சியிருந்தார். maatram.org/articles/12584
#KumarapuramMassacre
தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர முடியாது எனவும், இதனால் 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமலாக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் காணாமலாக்கல் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, இணையவழி (Online) ஊடாக அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் எழுத்துமூல கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
#lka #SriLanka
1980ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டு வரையில் பெருந்தோட்டக் காணிகளில் 46,272 (16.42%) ஹெக்டயர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பெருந்தோட்டக் காணிகள் என்ற வரையறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது வெறும் 4.28% காணியை மலையக தமிழரின் வீட்டுரிமைக்காக ஒதுக்குவதில் ஏன் தயக்கம்? maatram.org/articles/12464
#lka #SriLanka #Malaiyaham #MalaiyahaTamil #CeylonTea
சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பிறகு மன அமைதியுடன் வாழ்வதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு பல வசதிகளை வழங்குவது பல நாடுகளில் பாரம்பரிய நடைமுறையாக இருக்கிறது” - முன்னாள் சபாநாயகர் maatram.org/articles/12579
#lka #SriLanka
இந்தியா, இலங்கை போன்று அரசியலிலும் ஆட்சிமுறையிலும் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய நாடுகளில் அரசியலைப் பயன்படுத்தி பெரும் தனவந்தர்களாக மாறிய எத்தனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஓய்வூதியங்களை பெறுகிறார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி. maatram.org/articles/12579
#lka #SriLanka
Land Ownership, Use, Alienation & Development: Revisiting the Proposed Kivul Oya Project
www.cpalanka.org/land-ownersh...
#lka #SriLanka #LandGrab
குறுகிய கால அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், நீண்டகால நில உரிமை கோரிக்கைகளை திசைதிருப்பப் பயன்படுத்தப்படக்கூடாது. டித்வாவுக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அமையும் தற்காலிக தங்குமிட ஏற்பாடுகள், நில உரிமையை நோக்கிய ஒரு வழியாக இருக்க வேண்டும். maatram.org/articles/12574
#lka #SriLanka #MalaiyahaTamil #Ditwah
விடுதலை என்ற இலட்சியத்தினை இனவழிப்புக்கும், இனச்சுத்திகரிப்புக்கும் வித்திடும் ஐரோப்பிய பாணி நவீன சிந்தனை முறையில் இருந்தும், அதனது அரசியற் கட்டமைப்புக்களிடம் இருந்தும் விடுதலைசெய்வது எப்படி என்றும் சிந்திக்கவேண்டியது அவசியம். maatram.org/articles/11231
#IndependenceDaySL