செம்மணி மனித புதைக்குழியில் மீட்கப்பட்ட 25ஆவது சான்று பொருளான செருப்பு 1980 இற்கும் 1995ஆம் ஆண்டுக்கும் உட்பட்டதாக இருக்கலாம் என்றும் ‘பாட்டா’ நிறுவனத்தினால் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிவிப்பு www.virakesari.lk/article/229653
#lka #SriLanka #MassGrave #ChemmaniMassGraves 📷
Prabhakaran Dilakshan
செம்மணி மனித புதைக்குழியில் மீட்கப்பட்ட 25ஆவது சான்று பொருளான செருப்பு 1980 இற்கும் 1995ஆம் ஆண்டுக்கும் உட்பட்டதாக இருக்கலாம் என்றும் ‘பாட்டா’ நிறுவனத்தினால் 39 ரூபாய் 90 சதம் என விலை குறிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிவிப்பு www.virakesari.lk/article/229653
#lka #SriLanka #MassGrave #ChemmaniMassGraves 📷
Prabhakaran Dilakshan
#ChemmaniMassGraves இல் நேற்றுமுன்தினம் 227 இலக்கமிடப்பட்டிருந்த ஒரு எலும்புக்கூட்டுத் தொகுதி கால்கள் மடிக்கப்பட்டிருந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
📷 kumanan, Prabhakaran Dilakshan, Shabeer Mohamed
#ChemmaniMassGraves
2ஆம் கட்ட அகழ்வுப் பணி இன்றுடன் நிறைவு - 45 நாள்
இதுவரை 240 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன
📷 kumanan, Prabhakaran Dilakshan, Shabeer Mohamed
#ChemmaniMassGraves
2ஆம் கட்ட அகழ்வுப் பணி - 37 நாள் (29.08.2025)
நேற்று 10 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மொத்தமாக 187 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 174 தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
📷 kumanan
#ChemmaniMassGraves: @CPASL + @PSaravanamuttu letter to the Minister of Justice and National Integration on Critical Law and Policy Reforms
www.cpalanka.org/letter-to-th... + www.facebook.com/share/p/19PP...
#lka #SriLanka #MassGrave #MassGravesSriLanka
இன்று பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஓகஸ்ட் 14 யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஸ்கான் மற்றும் மண் பரிசோதனை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் ஓகஸ்ட் 21 முதல் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#lka #SriLanka #ChemmaniMassGraves
சிசு ஒன்றின் எலும்புக்கூட்டுத் தொகுதியொன்று மிகவும் கவனமாக இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது.
#SriLanka #MassGrave #chemmanimassgraves
📷@kumanan93 @Shabeer Mohamed
நேற்று செருப்புடன் கண்டறியப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன் அதனருகில் இடுப்பில் கட்டப்படும் தாயத்தொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
செருப்பு, தாயம், காசு உள்ளிட்ட சான்று பொருட்கள் மீட்கப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
#ChemmaniMassGraves
#ChemmaniMassGraves இராண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் 32 நாள் (6.08.2025)
இன்று 6 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மொத்தமாக 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 133 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
#lka #SriLanka #MassGrave 📷@Prabhakaranlk @kumanan93
"செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர் (செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில்). எவரும் எந்தவொரு பொருளையும் அடையாளம் காணவில்லை" - சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
#lka #SriLanka #ChemmaniMassGraves #MassGrave
#ChemmaniMassGraves இராண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் 18 நாள் பணிகளின்போது மேலும் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மொத்தமாக 85 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 67 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
#lka #SriLanka #MassGrave 📷 Prabhakaran Dilakshan
#ChemmaniMassGraves இராண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் 16 நாள் பணிகளின்போது (21.07.2025) மேலும் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்.
மொத்தமாக 72 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 65 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
#lka #SriLanka #MassGrave
📷@Prabhakaranlk
செம்மணி மனித புதைக்குழிக்கு நீதிகோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் ஆர்ப்பாடம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
www.facebook.com/share/p/1Eh1...
#ChemmaniMassGraves #MassGrave #lka #SriLanka
சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அளித்த மருத்துவ கூராய்வு ஆய்வறிக்கையில் -
#ChemmaniMassGraves #MassGrave #lka #SriLanka
செம்மணி மனித புதைக்குழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவுக்கமைய தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தார்.
#ChemmaniMassGraves #MassGrave #lka #SriLanka
#ChemmaniMassGraves அகழ்வுப் பணி நேற்றைய தினத்துடன் இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் 21ஆம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதுவரை ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ இல் 63 மற்றும் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ இல் 2 என மொத்தமாக 65 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
#SriLanka #MassGrave #Chemmani
📷 @Prabhakaran Dilakshan
செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் 13ஆவது நாள் அகழ்வுகள் இன்றையதினம் நிறைவுற்ற நிலையில் இதுவரை 56 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, 50 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
#SriLanka #MassGrave #ChemmaniMassGraves
📷 @Prabhakaran Dilakshan
"இங்கு காணப்படும் எலும்புக் கூட்டுத்தொகுதிகளுக்குரிய உடலங்கள் ஒன்றரை, இரண்டு அடி ஆழத்தில்தான் புதைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒரு நடைமுறையைப் பின்பற்றி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடமாகத் தெரியவில்லை. ஒரு குற்றம் நடந்த இடமாகவே இந்தப் புதைக்குழி தெரிகிறது" - சட்டத்தரணி கே.எஸ் ரத்னவேல்
#lka #SriLanka #MassGrave #ChemmaniMassGraves
🎥 Prabhakaran Dilakshan
“செம்மணியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஆதரிப்பதில் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்” - பிடிட்டிஷ் அரசாங்கம் www.theyworkforyou.com/wrans/?id=20...
#lka #SriLanka #MassGrave #ChemmaniMassGraves
Awantha Artigala, Namal Amarasinghe, Sajith Bandara ஆகியோரின் செம்மணி மனித புதைக்குழி தொடர்பான கார்டூன்கள்
#SriLanka #MassGrave #ChemmaniMassGraves
செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட ஏற்கனவே அடையாளம் புத்தக பையை ஒத்த நீல நிற பை, அதன் அருகில் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி, சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை, சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
#SriLanka #MassGrave #ChemmaniMassGraves
📷 Prabhakaran Dilakshan + kumanan
செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றையதினம் நிறைவுற்ற நிலையில் இதுவரை 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, 22 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
#lka #SriLanka #MassGrave #ChemmaniMassGraves 📷Prabhakaran Dilakshan
“ #ChemmaniMassGraves இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள்.”
www.aljazeera.com/features/202...
#lka #SriLanka
Raj Somadeva, the archaeologist leading the excavation, told AlJazeera that the 19 bodies discovered so far include three “neonatal” skeletons, or babies younger than 10 months old. www.aljazeera.com/features/202...
by Jeevan Ravindran
#ChemmaniMassGraves #SriLanka
📷 @tamilguardian.bsky.social
செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் மொத்தமாக 19 முழுமையான மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டதோடு ஒன்பது நாட்களாக இடம்பெற்றுவந்த பரீட்சார்த்த அகழ்வுப்பணி இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
#lka #SriLanka #MassGrave #ChemmaniMassGraves
📷 @Prabhakaran Dilakshan + Kumanan
#ChemmaniMassGraves இரண்டாவது மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதற்கான முக்கிய படியாக அமையலாம் - @amnestysasia
#lka #SriLanka #MassGrave
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 07 மனித மண்டையோடுகளுடன் கூடிய எலும்பு கூட்டு எச்சங்களில் ஒரு எலும்பு கூட்டு தொகுதி நேற்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
#lka #SriLanka #MassGrave #ChemmaniMassGraves
📷 Prabhakaran Dilakshan